ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை கலக்கிய கொள்ளை கும்பல் சிக்கியது..! கொள்ளைகாரியும் கைது..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை கலக்கிய கொள்ளை கும்பல் சிக்கியது..! கொள்ளைகாரியும் கைது..

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையி ல் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உள்ளடங் கலாக 3 கொள்ளைக்காரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கடந்த 10ஆம் திகதி சாவகச்சேரி பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வயோதிப தம்பதியினரை காயப்படுத்தி வீட்டிலிருந்த 5 பவுண் நகைகள் மற்றும் 16 ஆயிரம் ரூபாய் பணம், அதிதிறன் அலைபேசி உள்ளிட்டவற்றைக் 

கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்பு பொலிஸ் பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 

மேலும் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 9 பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டன.யாழ்ப்பாணம், மானிப்பாய் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகளில் உள்ள 

நகைக் கடைகளில் அடகு வைக்கப்பட்ட நிலையில் 16 பவுண் நகை அடைவு சீட்டுகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. இந்தக் கொள்ளைக் கும்பல் அராலி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டது. 

அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேக நபர்கள் மானிப்பாய், சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் 

தொடர்புடையவர்கள் என்று முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு