யாழ்.மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு பரிசோதனை..! எவருக்கும் தொற்றில்லை.. பணிப்பாளர் மகிழ்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு பரிசோதனை..! எவருக்கும் தொற்றில்லை.. பணிப்பாளர் மகிழ்ச்சி தகவல்..

யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொ ள்ளப்பட்டிருக்கும் நிலையில், எவருக்கும் கொரோனா தொற்று இல்லை. என்பது உறு திப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனும திக்கப்பட்ட 3 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், யாழ்.மாநகரசபை எல்லைக்குள் உள்ள 30 பேர், அரியாலை ஆராதனையில் கலந்து கொண்ட கிளிநொச்சியை சேர்ந்த 11 பேர், 

வெளிநாட்டிலிருந்து வந்து கிளிநொச்சியில் தங்கியிருந்த 5 பேர் உள்ளடங்கலாக 50 பேருக்கு இந்த பரிசோதனை யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்றிரு ந்தது. இதன்போது எவருக்கும் தொற்று ஏற்படவில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு