திங்கள் தொடக்கம் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்வு..! 19 மாவட்டங்களில் மட்டும், அதிரடி தீர்மானத்திற்கு அரசு முஸ்தீபு..

ஆசிரியர் - Admin
திங்கள் தொடக்கம் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்வு..! 19 மாவட்டங்களில் மட்டும், அதிரடி தீர்மானத்திற்கு அரசு முஸ்தீபு..

இடர் வலயங்களாக அறிவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் தவிர்ந்த 19 மாவட்டங்களில் எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு அரசாங்கம் சிந்திக்கின்றது. 

மேற்கண்டவாறு கொழும்பு ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகிவருகின்றது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, தினமும் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டத்தை நீக்கி மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எனினும் கொரோனா இடர் வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. காலை நேரங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் 

அரசாங்க சேவைக்கு 20 வீதமான அரச ஊழியர்கள் மாத்திரமே அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் தனியார் துறையினர் பணி செய்வதற்கான நேரமாக காலை 10 மணி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் பிரிவின் அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அனைத்து ஊழியர்களும் இரவு 8 மணிக்குள் அவர்களுக்கு வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதுடன், 8 மணியிலிருந்து காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை அடுத்த வாரம் முதல் பகுதியளவில் இலங்கையை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு