யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதா..? பேச்சுக்கே இடமில்லை என்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதா..? பேச்சுக்கே இடமில்லை என்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்..

யாழ்.மாவட்டத்தில் தற்போதுள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது சாத்தி யமற்ற ஒரு விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண இன்று யாழ்.பலாலியில் கூறியிருக்கின்றார். 

இன்று காலை பலாலியில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களினதும் படைத்தளதிக ளையும் சந்தித்து பேசிய நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

வடக்கிலுள்ள அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. எனவே கொழும்பைப் போல தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. எனவே, தற்போதைய நிலைமையில் 

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு செயலாளர் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும் யாழ்ப்பாண மக்களுக்கு தான் இரண்டு கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் 

அவர் குறிப்பிட்டுள்ளார்.ஒன்று ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள்! மற்றையது உண்மையை பேசுங்கள்! ஏனெனில் நாங்கள் உங்களுக்காக சேவையாற்றத் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், நீங்கள் உண்மையைக் கூறாது விட்டால் நாம் எந்தவித செயற்பாட்டிலும் ஈடுபட முடியாது. எனவே வடக்கில் உள்ள மக்களிடம் இந்த கோரிக்கைகளை முன்வைக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு