மீண்டெழுகிறது யாழ்.மாவட்டம்..! தாவடி மீண்டது, 332 பேருக்கு இன்று தனிமைபடுத்தலில் இருந்து மீட்சி..

ஆசிரியர் - Editor I
மீண்டெழுகிறது யாழ்.மாவட்டம்..! தாவடி மீண்டது, 332 பேருக்கு இன்று தனிமைபடுத்தலில் இருந்து மீட்சி..

யாழ்.மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட தாவடி கிராமம் இன்று காலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவி க்கப்பட்டிருக்கும் நிலையில், தாவடி கிராமத்துடன் சேர்த்து இன்றைய தினம் 332 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படவுள்ளனர். 

சுவிஸ் மதபோதகருடன் பழகிய மற்றும் ஆராதனைகளில் கலந்து கொண்டிருந்த 356 பேர் தனிமைப்படுத்தப்பட்டிரு ந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட 10 பேர் மற்றும் பலாலி தனிமைப்படுத்த ல் நிலையத்தில் உள்ள 14 பேர் தவிர்ந்து, 

332 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படுகின்றனர். இதற்கமைய இன்று காலை 7.30 மணியளவில் தாவடி கிராமத்திலிருந்து இராணுவம் விலகியுள்ளதுடன், பாதுகாப்புக்கள் அனைத்தும் தளர்த்தப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு