நீண்ட நாட்கள் ஓய்வில்லாமல் கொரோனா எதிர்ப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவம்..! ஊக்கப்படுத்த இராணுவ தளபதி வடக்கு விஜயம்..

ஆசிரியர் - Editor I
நீண்ட நாட்கள் ஓய்வில்லாமல் கொரோனா எதிர்ப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவம்..! ஊக்கப்படுத்த இராணுவ தளபதி வடக்கு விஜயம்..

கொரோனா எதிர்ப்பு வேலைத்திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் படையினர் நீண்ட நாட்கள் வீடுகளுக்கு செல்லாமல் ஓய்வு வழங்கப்படாமல் இருக்கும் நிலையில், படையினரை ஊக்குவிப்ப தற்காக இராணுவ தளபதி இன்று வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளுள்ளார். 

இன்று காலை மாங்குளம் பகுதிக்கு விஜயம் மெற்கொண்டிருந்த அவர் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தில் படை வீரர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார். புத்தாண்டு விடுமுறை மற்றும் கொரோனா தொற்று காரணமாக படையினர் நீண்ட காலமாக வீடுகளிற்கு 

விடுமுறையில் செல்லாது அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றமையை பாராட்டும் வகையிலும், அவர்களின் பணிகளை ஊக்குவிக்கும் வகையிலும் இன்று வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் பலவற்றுக்கும் அவர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

கிளிநொச்சி விஜயத்தினை முடித்த அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு