கிளிநொச்சி- பூநகரியில் கடற்படையினர் காடைத்தனம்..! நிறைவெறியில் நாய்களாக மாறி மீனவர்களை கடித்தும் துன்புறுத்தியதுடன், அச்சுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- பூநகரியில் கடற்படையினர் காடைத்தனம்..! நிறைவெறியில் நாய்களாக மாறி மீனவர்களை கடித்தும் துன்புறுத்தியதுடன், அச்சுறுத்தல்..

கிளிநொச்சி பூநகரி- கிராஞ்சி பகுதியில் கடற்படையின் அனுமதியை பெற்று  கடற்றொழிலுக்கு சென்ற 3 மீனவர்களை கைது செய்த கடற்படையினர், நீரிழ் மூழ்கடித்தும், அடித்தும், கடித்தும் துன்புறுத்தியுள்ளனர். 

இதன்போது கடற்படையினர் நிறை வெறியில் நின்றதாக கூறும் மீனவர்கள் மறுநாள் குறித்த மீனவர்களை சந்தி த்து வைத்தியசாலைக்கு செல்லகூடாதெனவும், பொலிஸ் நிலையத்திற்கு செல்ல கூடாதெனவும் 

கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 7ம் திகதி இரவு 7 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தின்போது சில கடற்படை சிப்பாய்கள் நிர்வாணமாக நின்றதாகவும் கூறப்படுகின்றது. 

இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பெறாமல், பொலிஸாருக்கும் தொிவிக்காமல் குறித்த மீனவர்கள் வீடுகளிலேயே தங்கியிருந்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு