புதுவருட தினத்தில் 10 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்வு..! யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..

ஆசிரியர் - Editor I
புதுவருட தினத்தில் 10 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்வு..! யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் 14ம் திகதி புதுவருட தினத்திலும் அமுலில் இருக்கும் என அறிவித்திருக்கும் அரசாங்கம், மக்களின் பாதுகாப்புக்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. அத னை மக்கள் பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அறிவித்துள்ளது. 

19 மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை(09.04.2020) வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 04.00 மணிக்கு அமுல்படுத்தப்படுத்தப்படவுள்ளது. மீண்டும் இம்மாதம் 14 செவ்வாய்கிழமை காலை 06.00 மணிக்கு நீக்கப்பட்டு 

அன்றைய தினம் மாலை 04.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் 

ஏற்படும் கஷ்டங்களை தெளிவுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.மேலும் புத்தாணடு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக 

சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக 

குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு