9ம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும்..! யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..

ஆசிரியர் - Editor I
9ம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும்..! யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படாது என அறிவித்திருக்கும் அர சாங்கம் மிகுதி 19 மாவட்டங்களில் 9ம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை ஊர டங்கு சட்டம் தளர்த்தப்படும். எனவும் அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு ள்ளதாவது, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.கோரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும்

நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது என்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு