யாழ்.மாவட்ட மக்களுக்கு பேரதிர்ச்சி..! மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று..! மொத்தம் 4 ஆனது, சற்று முன்னர் வெளியானது அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களுக்கு பேரதிர்ச்சி..! மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று..! மொத்தம் 4 ஆனது, சற்று முன்னர் வெளியானது அதிர்ச்சி தகவல்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டி ருக்கும் நிலையில், மாவட்டத்தில் 4 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். 

இந்நிலையில் யாழ்.மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மத போதகருக்கு 

கொரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் இன்று பிற்பகல் உறுதிப்படுத்தப்பட்டது.இந்த நிலையில் அந்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் இருவருக்கு 

கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. 

அந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 10 பேரின் பரிசோதனை அறிக்கையில் கிடைத்த நிலையில் மூவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மானிப்பாயைச் சேர்ந்த மத போதகர் மேலதிக சிசிக்சைக்காக வெலிகந்தை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரும் அங்கு மாற்றப்படுவார்கள் என்று அறியமுடிகிறது.

சுவிஸர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த போதகரால் நெருங்கிப் பழகியவர்களே பலாலி தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். 

இதேவேளை, இந்த இருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு தகவல் வெளியிடவில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு