25 இலட்சம் கொடுத்த சிவகார்த்திகேயன்!!

ஆசிரியர் - Editor III
25 இலட்சம் கொடுத்த சிவகார்த்திகேயன்!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முதலமைச்சரின் நிவாரன நிதியத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூபா 25 இலட்சம் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும்  உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் ஸ்தம்பித்துள்ளது. 

இதில் மீளும் நடவடிக்கைக்காக நிதி உதவி வழங்கும்படி பிரதமர் மோடியும், தமிழகம் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூபா 25 இலட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே பெப்சி தொழிலாளர்களுக்கும் ரூபா 10 இலட்சம் நிதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு