வடமாகாணம் அபாய வலயமாக அறிவிக்கப்படவில்லை..! யாழ்.மாவட்டம் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசம் ஆகியனவே முடக்கப்பட்டுள்ளன..

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் அபாய வலயமாக அறிவிக்கப்படவில்லை..! யாழ்.மாவட்டம் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசம் ஆகியனவே முடக்கப்பட்டுள்ளன..

வடமாகாணம் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகள் வதந்தி என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதே சமயம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிளைப்பள்ளி பிரதேசம் ஆகியன மட்டுமே முடக்கப்பட்டிருக்கின்றது. 

இவை தவிர்ந்த வடக்கின் மற்றய பகுதிகள் முடக்கப்படவில்லை. என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன உறுதிப்படுத்தியிருக்கின்றார். 

இதேவேளை வடமாகாணம் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டதாக இன்று காலை வெளியாகியிருந்த செய்திகள் வெறும் வதந்திகள் மட்டுமே என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு