வடமாகாண மக்களுக்காக குமார் சங்கக்கார செய்த நெகிழ்ச்சியான செயல்..! 1.6 மில்லியனை ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸிடம் கையளித்தார்..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண மக்களுக்காக குமார் சங்கக்கார செய்த நெகிழ்ச்சியான செயல்..! 1.6 மில்லியனை ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸிடம் கையளித்தார்..!

வடமாகாணத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார 1.6 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். 

கொழும்பு- பத்தரமுல்ல பகுதியில் உள்ள வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் ஆளுநரை சந்தித்து இந்த நிதியை குமார் சங்கக்கார ஆளநரிடம் வழங்கினார். 

இதன்போது குமார் சங்கக்கார ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில், எமது நாடு போன்று உலகமே பாதிக்கப்பட்டுள்ள இந்த COVID-19 வைரஸினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். 

எனவே நான், மஹேல ஜயவர்தன,சாலிய ஒஸ்ட்டின், நாதன் சிவகாமநாதன் மற்றும் எமது நண்பர்கள் சிலர் இணைந்து ஏதேனுமொரு உதவியை செய்ய முடியுமாக இருந்தால், 

அதனை பெரும் பாக்கியமாகக் கருதினோம். நாட்டு மக்களுக்கு அநேகமானவர்கள் உதவி செய்கின்றனர். இந்த போராட்டத்திற்கு கரம் கொடுக்கின்றனர். 

அயலவர்களின் நலன் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றனர். இதனை தொடர்ந்தும் முன்னெடுங்கள். அதேபோன்று, ஆலோசனைகளை பின்பற்றுங்கள்என குமார் சங்கக்கார குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு