மறு அறிவித்தல் வரை தனியாா் கல்வி நிலையங்களுக்கு பூட்டு..! ஆளுநா் அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I
மறு அறிவித்தல் வரை தனியாா் கல்வி நிலையங்களுக்கு பூட்டு..! ஆளுநா் அதிரடி உத்தரவு..

வடக்கு மாகாணத்தில் உள்ள தனியாா் கல்வி நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரும் வரையில் பூட்டப்படுவதாக வடமாகாண ஆளுநா் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் பணித்துள்ளாா். 

இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்படகூடிய ஆபதில் இருந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் இன்று முதல் ஏப்ரல் 20ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பீ எஸ் எம் சார்ள்ஸ் சிறப்புப் பணிப்புரை விடுத்துள்ளார். 

இவ் ஒழுங்கினை உள்ளூராட்சி சபைகள் (மாநகர சபை, நகரசபை, பிரதேச சபைகள்) உரிய முறையில் மேற்பார்வை செய்து அர்ப்பணிபுடன் இதனை நடை முறை படுத்தும்படியும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வடமாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்- என்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு