தலைகீழாக கவிழ்ந்த டிப்பா்..! டிப்பாில் இருந்து பாய்ந்து உயிா் தப்பிய சாரதி..

ஆசிரியர் - Editor I
தலைகீழாக கவிழ்ந்த டிப்பா்..! டிப்பாில் இருந்து பாய்ந்து உயிா் தப்பிய சாரதி..

மிதமிஞ்சிய வேகத்தினால் வீதியைவிட்டு விலகி தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளான டிப்பா் வாகனத்திலிருந்து பாய்ந்து சாரதி உயிா் தப்பியிருக்கின்றாா். 

திருகோணமலை- கண்டி வீதியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவவருவதாவது, 

திருகோணமலையில் இருந்து பொலன்னறுவை நோக்கி மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் சாரதியின் தூக்க நிலை காரணமாக இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மண் டிப்பரானது வீதி அருகாமையில் உள்ள வயல் நிலத்தினுள் குடை சாய்ந்துள்ளது. இதில் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு