அயன் பொக்ஸினால் 9 வயது சிறுவனுக்கு சூடு வைத்த கொரூர தாய் கைது..!

ஆசிரியர் - Editor I
அயன் பொக்ஸினால் 9 வயது சிறுவனுக்கு சூடு வைத்த கொரூர தாய் கைது..!

9 வயதான மகனுக்கு அயன் பொக்ஸை பயன்படுத் தி உடல் முழுவதும் சூடு வைத்த குற்றச்சாட்டில் சிறு வனின் தாயை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ள்ளார்.

வைத்தியசாலை பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இன்று முற்பகல் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த தாயை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீக்காயங்களுக்குள்ளான சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாயுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர், மின்னழுத்தியை சூடாக்கி மகனை காயப்படுத்தியுள்ளமை விசாரணைகளினூடாக தெரியவந்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள போதிலும், நேற்றைய தினமே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு