அயன் பொக்ஸை சூடாக்கி 9 வயது சிறுவனின் உடல் முழுவதும் சூடுவைத்த கொரூர தாய்..! 3 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுவன்..

ஆசிரியர் - Editor I
அயன் பொக்ஸை சூடாக்கி 9 வயது சிறுவனின் உடல் முழுவதும் சூடுவைத்த கொரூர தாய்..! 3 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுவன்..

பெற்ற பிள்ளைக்கு அயன் பொக்ஸினால் உடல் முழுவதும் சுட்டு குரூரமான சித்திரவதை புாிந்த தாயை கைது செய்து சட்டந டவடிக்கைக்கு உட்படுத்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது. காத்தான்குடி 2ம் குறிச்சியில் வசித்துவரும் 9 வயதான சிறுவன் ஒரு வன் உடல் முழுவதும் சூட்டு காயங்களுடன் காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளான். 

இது தொடா்பாக சிறுவன் கல்வி கற்றும் பாடசாலை நிா்வாகத்திற்கு பொதுமகன் ஒருவா் தகவல் வழங்கியுள்ளாா். இதனைய டுத்து பாடசாலை நிா்வாகம் உடனடியாக சிறுவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை நோில் அவதானித்துள்ளனா். 

பின்னா் சம்பவத்தின் ஆபத்தை உணா்ந்து உடனடியாக பாடசாலை நிா்வாகனத்தினால் சிறுவன் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போ தனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது. 

இதேவேளை கடந்த சனிக்கிழமை சிறுவனின் தாய் சிறுவனை குா்ஆன் மதரசாவுக்கு செல்லுமாறு வற்புறுத்தியிருக்கின்றாா். எனினும் அதற்கு செல்லாத சிறுவன் நித்திரை கொண்டுள்ளதுடன், 

தாயின் மீது கோபமடைந்து அயன் பொக்ஸை துாக்கி வீசியிருக்கின்றான். இதனால் ஆத்திரமடைந்த தாய் அயன் பொக்ஸை சூடாக்கி சிறுவனின் உடல் முழுவதும் கண்மூடித்தனமாகவும், மிக குரூரமாகவும் சூடு வைத்துள்ளாா். 

மேலும் கடந்த 3 நாட்களாக சிறுவனுக்கு எந்தவொரு சிகிச்சையும் வழங்காமல் வீட்டுக்குள் வைத்து அடைத்து துன்புறுத்தியிருக்கின்றாா். இந்நிலையில் வைத்தியசாலை நிா்வாகம் வைத்தியசாலை பொலிஸாா் ஊடாக 

சிறுவனின் தாயாா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு