உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து..! மோட்டாா் சைக்கிளில் பயணித்த ஒருவா் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து..! மோட்டாா் சைக்கிளில் பயணித்த ஒருவா் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவா் படுகாயம்..

உழவு இயந்திரத்துடன் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டாா் சைக்கிள் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் கூட சென்றவா் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளாா். 

மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்து தொடா்பாக மேலும் தொியவருவதாவது, வாழைச்சேனையிலிருந்து மோட்டார் சைக்கிளில் 

திருகோணமலைக்குச் செல்லும் போது வாகரைப் பகுதியில் வைத்து உழவு இயந்திரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதிலே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக 

வாகரை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்ததாகவும், அதில் மோட்டார் சைக்கிளின் பின் பக்கத்திலிருந்து சென்றவரே விபத்தில் பலியாகியுள்ளதுடன், 

வாகனம் செலுத்தியவர் படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வாகரை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வாகன விபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஏ.ரபீல் மரணமடைந்துள்ளதுடன், குறித்த விபத்தில் காயமடைந்து 

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பழைய கல்முனை வீதி கல்லடியைச் சேர்ந்த கி.லக்மன் (வயது 33) என்பவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.குறித்த விபத்து தொடர்பான 

மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு