ஆட்டோவும் லொறியும் நேருக்கு நோ் மோதி விபத்து..! ஒருவா் பலி, 3 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
ஆட்டோவும் லொறியும் நேருக்கு நோ் மோதி விபத்து..! ஒருவா் பலி, 3 போ் படுகாயம்..

வேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோவும், லொறியும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளாா். 

இந்த சம்பவம் மட்டக்களப்பு ஏறாவூா்- சந்திவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை இ டம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 3 போ் படுகாயமடைந்த நிலையில் 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மட்டக்களப்பில் இருந்து கிரான் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற 

சிரிய ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரில் பதுளை லுனுகலையைச் சேர்ந்த 

ரங்கன் ராமசாமி (71 வயது) என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் 

அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிறியரக லொறியினது சாரதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு