மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்த வருமான வரித்துறை!!

ஆசிரியர் - Editor III
மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்த வருமான வரித்துறை!!

இளையதளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  “மாஸ்டர் ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டெல்லியிலும், சென்னை பூந்தமல்லியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளியிலும் நடந்தது. அதனை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள ஷிமோகா சிறையிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். தற்போது சென்னையில்  அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி. 2வது சுரங்கப் பகுதியில்  நடைபெற்று வருகிறது.   படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் போது வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். 

நடிகர் விஜய்க்கு சம்மன் வழங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் அவரை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஏஜிஎஸ் சோதனையை தொடர்ந்து மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

நெய்வேலியில் படப்பிடிப்பில் உள்ள நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை நேரில் சம்மன் வழங்கியது  படப்பிடிப்பு தளத்தில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  விஜயிடம் வருமானவரித்துறை விசாரித்து வரும் நிலையில் மாஸ்டர் படிப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனத்திற்க்கு சொந்தமான 20 இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு