பிரபல மாடல் அழகி மீது ஆபாச குற்றச்சாட்டுக்கள்!!

ஆசிரியர் - Editor III
பிரபல மாடல் அழகி மீது ஆபாச குற்றச்சாட்டுக்கள்!!

முன்னாள் மிஸ் இந்தியாவும் மாடல் அழகியுமான நடாஷா சூரி சிங் தன்மீது ஆபாச குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதாக கூறி ஃபிளின் ரெமெடியோஸ் என்ற நபர் மீது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். 

நடாஷா தனது சட்டத்தரணி மாதவ் வி.தோரத்துடன் சென்று மும்பை தாதர் பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். இது குறித்த முறைப்பாடு சைபர் குற்ற புலனாய்வு பிரிவினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

அவர் தனது முறைப்பாட்டில்:-

2019 நவம்பரில் மாதத்தில் இருந்து அவர் இவ்வாறு தொல்லை தருகின்றார். என்னை குறிவைத்து போலி செய்தி கட்டுரைகளை உருவாக்குகின்றார்கள். 

மேலும் ஒரு குளியலறையில்  முகம் மங்கலாக தெரியும் சிறுமிகளின் படங்களை வெளியிட்டு அதில் என் பெயரை போட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் ஆபாச வலைதளங்களிலிருந்து படங்களை எடுத்து அவற்றில் எனது தலைகளை சேர்த்து வெளியிட்டு வருகின்றனர்.

நடாஷா சூரி 2006-ல் பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார் மற்றும் உலக அழகி போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வந்தார். மலையாளத் திரைப்படமான "கிங் லையர்" மூலம் 2016 ஆம் ஆண்டில் அறிமுகமான இவர் பாபா பிளாக் ஷிப் உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு