ஒட்டுசுட்டானில் தொடா்ந்து சங்கிலி அறுப்பு கொள்ளையா்கள் அட்டகாசம்..! வங்கி முகாமையாளரும் சங்கிலியை இழந்தாா்..

ஆசிரியர் - Editor I
ஒட்டுசுட்டானில் தொடா்ந்து சங்கிலி அறுப்பு கொள்ளையா்கள் அட்டகாசம்..! வங்கி முகாமையாளரும் சங்கிலியை இழந்தாா்..

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மக்கள் வங்கி கிளையின் முகாமையாளருடைய தங்க சங்கிலியை மோட்டாா் சைக்கிளில் வந்தவா்கள் அறுத்து சென்றுள்ளனா். 

இதன்போது அவருடைய கழுத்து பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் 

முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவமானது முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் முல்லைத்தீவு தொழில்நுட்பக்கல்லூரியை அடுத்துள்ள வெளியான பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

ஆள் நடமாட்டம் இல்லாததைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் 

தனியாகச் செல்லும் பெண்களைக் குறிவைத்து இவ்வாறான வழிப்பறிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு