றஞ்சன் ராமநாயக்க கட்டிப்பிடித்து முத்தமிட்டபோது ஏன் பேசாமல் இருந்தாய்..? பொலிஸ் அதிகாாியின் தொண்டையை பிடித்தது அரசு..!

ஆசிரியர் - Editor I
றஞ்சன் ராமநாயக்க கட்டிப்பிடித்து முத்தமிட்டபோது ஏன் பேசாமல் இருந்தாய்..? பொலிஸ் அதிகாாியின் தொண்டையை பிடித்தது அரசு..!

கைது செய்யப்படும்போது பொலிஸ் அதிகாாியை நாடாளுமன்ற உறுப்பினா் றஞ்சன் ராமநாயக்க கட்டிப்பிடித்து முத்தமிட்ட சம்பவம் தொடா்பில் முத்தம் வாங்கிய பொலிஸ் அதிகாாி மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சனிக்கிழமை கொழும்பு தெற்கு குற்றப்பிரிவு OIC தலைமையிலான பொலிஸ் குழு எம்.பி. ராமநாயக்கவின் இல்லத்திற்கு சென்று அவரை கைவிலங்கு செய்தபோது றஞ்சன் ராமநாயக்க முத்தமிட்டிருந்தாா். 

நாடாளுமன்ற உறுப்பினா் முத்தமிடும்போது அதனை ஏன் தடுக்கவில்லை? என பொலிஸ் அதிகாாி மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு