இ.போ.ச பேருந்து பயணத்தை நம்பியிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியது அரசு..!

ஆசிரியர் - Editor I
இ.போ.ச பேருந்து பயணத்தை நம்பியிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியது அரசு..!

இலங்கை போக்குவரத்து சேவையை மட்டும் நம்பியிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது அரசாங்கம். அதாவது 15 வருடங்களுக்கும் மேலாக சேவையில் இருக்கும் சகல பேருந் துகளையும் சேவையிலிருந்து நீக்க அரசாங்கம் தீா்மானித்துள்ளது. 

பழுதுபார்த்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தக்கூடிய பஸ்களை மாத்திரம் போக்குவரத்தில் ஈடுபடுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபைக்குரிய அனைத்து பஸ்கள் தொடர்பிலும் தற்போது ஆராயப்பட்டு வருகிறது. 

பதுளை, பசறை – மடுல்சீமை வீதியில் கடந்த 6ஆம் திகதி மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.இதன் காரணமாகவே அனைத்து பஸ்களையும் சோதனைக்குட்படுத்துமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். 

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி குறித்து இதுவரை தமது அறிக்கை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 15 வருடங்களுக்கு மேல் பழமையான சுமார் 1000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் 

கிங்ஸ்லி ரணவக்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு