நல்லுாா் கந்தசுவாமி கோவில் சுற்றாடலில் உள்ள இரு வீடுகளில் கொள்ளையா்கள் கைவாிசை..! 30 பவுண் நகை, 2லட்சம் பணம் கொள்ளை.

ஆசிரியர் - Editor I
நல்லுாா் கந்தசுவாமி கோவில் சுற்றாடலில் உள்ள இரு வீடுகளில் கொள்ளையா்கள் கைவாிசை..! 30 பவுண் நகை, 2லட்சம் பணம் கொள்ளை.

நல்லுாா் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள இரு வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையா்கள் 31 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்ற மை அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியிருக்கின்றது. 

ஆலய சுற்றாடலில் தொடா்ச்சியாக வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடப்படும் சம்பவங்கள் அதிகாித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த திங்கள் கிழமை  அதிகாலையில் நல்லுாா் ஆலயத்தின் முன்பாகவுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த திருடா்கள். 

வீட்டிலிருந்த 27 பவுண் தங்க நகைகள் மற்றும் 1 லட்சத்து 80 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றிருக்கின்றனா். இந்த ம்பவம் தொடா்பாக வீட்டின் உாிமையாளா் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளாா். 

இதேபோல் செட்டித்தெருவில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையா்கள் 5 பவுண் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு