தமிழீழ விடுதலை புலிகளை தோற்கடிக்க உதவிய இந்தியா மற்றும் சா்வதேசம்..! தமிழா் பிரச்சினைகளை தீா்க்க தவறிவிட்டது.

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளை தோற்கடிக்க உதவிய இந்தியா மற்றும் சா்வதேசம்..! தமிழா் பிரச்சினைகளை தீா்க்க தவறிவிட்டது.

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் ஒத்துழைப்புடனேயே தமிழீழ விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டாா்கள். ஆகவே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீா்ப்பதற்கான பொறுப்பும் இந்தியா உள்ளிட்ட சா்வதேச நாடுகளுக்கு உள்ளது. 

இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதனை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசாங்கத்தின் இந்த 

அர்ப்பணிப்பான சொற்களின் உண்மைத்தன்மை கிடையாது என்று விமர்சித்த இரா.சம்பந்தன், இப்படியான போலி செயற்பாட்டின் ஊடாகவே சர்வதேச உதவியைப் பெற்று விடுதலைப் புலிகளின் போராட்டத்தை அரசாங்கம் தோற்கடித்ததாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எவ்வாறாயினும் புதிய ஜனாதிபதியாக ஆட்சிக்குவந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க தேவையான 

அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க தயார் என்பதையும் அவர் சபையில் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு