யாழ்.பண்ணை கடற்கரையில் உள்ள உணவகத்திற்குள் புகுந்த ரவுடிகள் ஊழியா் மீது கொலை வெளி தாக்குதல்..! ஊழியா் ஆபத்தான நிலையில்.

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்ணை கடற்கரையில் உள்ள உணவகத்திற்குள் புகுந்த ரவுடிகள் ஊழியா் மீது கொலை வெளி தாக்குதல்..! ஊழியா் ஆபத்தான நிலையில்.

பண்ணை கடற்கரையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்குள் புகுந்த ரவுடி கும்பல் பணியாளா் மீது கொலை வெளி தாக்குதல் நடாத்தியுள்ளது. 

இதனால் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் பணியாளா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். 

இந்தச் சம்பவம் நேற்றிரவு 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரவு மூடப்பட்டிருந்த விடுதியை திறந்து 

ஐஸ்கிறீம் மற்றும் பணம் வைக்கும் லாச்சித் திறப்பைக் கோட்டு தாக்குதல் மேற்கொண்டதாக பணியாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த பணியாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையில் இராணுவ அதிரடிப்படையினரின் முகாம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு