சுமந்திரனை கொலை செய்ய சதி..! சிறையில் உள்ளவா்களை விடுதலை செய்யுங்கள் உறவுகள் கண்ணீா்மல்க ஜனாதிபதியிடம் கோாிக்கை.

ஆசிரியர் - Editor I
சுமந்திரனை கொலை செய்ய சதி..! சிறையில் உள்ளவா்களை விடுதலை செய்யுங்கள் உறவுகள் கண்ணீா்மல்க ஜனாதிபதியிடம் கோாிக்கை.

நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவா்களை விடுதலை செய்யக்கோாி உறவினா்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் கோாிக்கை முன்வைத்துள்ளனா். 

2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி 

மற்றும் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் 2017 ஆம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் 2018ஆம் ஆண்டு 

விசாரணை எனக் கூறி அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.ஏனைய நால்வரும் தற்பொழுதும் வழக்கு தொடரப்பட்ட நிலையில் 

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைகளில் 

தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் விடுதலை செய்வதற்கு நாட்டின் ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு