4 சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம்..! வைத்தியரை அதிரடியாக கைது செய்தது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
4 சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம்..! வைத்தியரை அதிரடியாக கைது செய்தது பொலிஸ்..

கிழக்கு மாகாணம் அம்பாறையில் கிராமிய வைத்தியசாலையின் வைத்தியா் ஒருவா் பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் புாிந்த சம்பவம் தொடா்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த வைத்தியா் கைது செய்யப்பட்டுள்ளாா். 

மரதன் ஓட்டப்போட்டிக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைக்காக குறித்த மாணவிகள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் வைத்தியர் தங்களைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமிகளால் 

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.18, 14 மற்றும் 17 வயதான இரண்டு மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு