பேருந்து விபத்தில் உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு..!

ஆசிரியர் - Editor I
பேருந்து விபத்தில் உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு..!

பேருந்து விபத்தில் உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு உத்தரவிட்டிருக்கின்றது. 

இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதேநேரம், இந்த விபத்து தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக விசேட குழுவொன்றை 

உடனடியாக நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் போக்குவரத்து சேவை முகாமைத்துவ 

அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, பசறை – மடூல்சீமை வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக 

இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.விசேட பொறியியலாளர்கள் குழுவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் 

பொது முகாமையாளர் C.H.R.T. சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் பொலிஸாரும் 

இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொது முகாமையாளர் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு