குடத்தனையில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த அரச அதிகாாி ஒருவா் கைது..! உழவு இயந்திரமும் பறிமுதல்..

ஆசிரியர் - Editor I
குடத்தனையில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த அரச அதிகாாி ஒருவா் கைது..! உழவு இயந்திரமும் பறிமுதல்..

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த தபால் ஊழியா் ஒருவரை பொலிஸாா் கைது செய்துள்ளதுடன், அவருக்கு சொந்தமான உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனா். 

மணல் அகழ்வுக்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், மணல் அகழ்வை பொதுமக்கள் தொடா்ச்சியாக எதிா்த்துக் கொண்டிருக்கும் நிலையில் குடத்தனை பகுதியில் குறித்த அரச தபால் ஊழியா் மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளாா். 

இதனையடுத்து பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் காங்கேசன்துறை விசேட பொலிஸ் பிாிவு சம்பவ இடத்திற்கு விரைந்து தபால் ஊழியரை கைது செய்ததுடன் அவருடைய உழவு இயந்திரத்தையும் பறிமுதல் செய்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு