மர கடத்தல்காரனின் வாகனம் விபத்து..! கடத்தல்காரன் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
மர கடத்தல்காரனின் வாகனம் விபத்து..! கடத்தல்காரன் தப்பி ஓட்டம்..

வவுனியா- ஓமந்தை கள்ளிக்கும் பகுதிலிருந்து நகா் பகுதியை நோக்கி கள்ள மரங்களுடன் சென்ற கப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் ஓமந்தை A9 வீதி கள்ளிகுளம் சந்தியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வாகனம் சட்டவிரோத மரங்களுடன் வவுனியா நோக்கிச் சென்றவேளை, 

கள்ளிக்குளம் வளைவில் திரும்பமுற்பட்டபோது வீதியின் அருகில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியது.இதனையடுத்து, வாகனத்தை செலுத்திய சாரதி தப்பியோடியுள்ளதாக 

தெரிவித்த ஓமந்தை பொலிஸார், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு