அச்சுவேலியில் வீட்டுக்குள் புகுந்து ரவுடிகள் அட்டகாசம்..! பொருட்கள், வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன..

ஆசிரியர் - Editor I
அச்சுவேலியில் வீட்டுக்குள் புகுந்து ரவுடிகள் அட்டகாசம்..! பொருட்கள், வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன..

யாழ்.அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த ஆவா குழு ரவுடிகள் வீட்டிலிருந் த பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டிலிருந்தவா்களை அச்சுறுத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றனா். 

இந்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கன்ரர் ரக வாகனத்தில் வந்திறங்கிய கும்பல் வீட்டின் முன் நிறுத்திவைத்திருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை அடித்துச் சேதப்படுத்தியது. 

அதனால் வீட்டிலிருந்த மூவரும் அச்சமடைந்து அறை ஒன்றுக்குள் போய் பூட்டிவிட்டு இருந்துள்ளனர். வீட்டுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை 

அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் நடத்தியவர்களைத் தேடி வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு