மணல் கள்ளா்களை விரட்டியடித்த மக்கள்..! வீதியில் மணலை கொட்டி, தொலைத் தொடா்பு வயா்களை அறுத்து கள்ளா்கள் அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
மணல் கள்ளா்களை விரட்டியடித்த மக்கள்..! வீதியில் மணலை கொட்டி, தொலைத் தொடா்பு வயா்களை அறுத்து கள்ளா்கள் அட்டகாசம்..

யாழ்.அாியாலை கிழக்கு பகுதியில் மணல் அகழ்ந்தவா்களை மக்கள் விரட்டியடித்த நிலையில், வாகனத்துடன் தப்பி ஓடிய மணல் கொள்ளையா்கள் அள்ளிய மணலை வீதி முழுவதும் கொட்டி சென்றதுடன், தொலைத் தொடா்பு வயா்களையும் அறுத்துள்ளனா். 

அரியாலை நெடுங்குளம் சந்தி பகுதியில் சுமார் 300 மீற்றர் வரையான வீதியில் மணல் பரவி கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. அதனால் யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியூடான போக்குவரத்துக்கு 10 மணித்தியாலத்துக்கு மேல் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.மணல் ஏற்றி வைந்த கனகர வாகனம், இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின் வயர்கள் மற்றும் தூணையும் சேதப்படுத்தி சென்றுள்ளது. மணல் ஏற்றி வந்த வாகனம் 

இதுவரை அடயாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு