சீனா நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகிறது விசேட தொழிநுட்ப ஆய்வுக்குழு..!

ஆசிரியர் - Editor I
சீனா நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகிறது விசேட தொழிநுட்ப ஆய்வுக்குழு..!

ஹப்புத்தளை விமான விபத்து தொடா்பாக ஆராய்வதற்காக சீனா நாட்டிலிருந்து விசேட தொழிநு ட்ப குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை காலை ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளான Y.12 ரக விமானம் குறித்து ஆய்வு செய்ய சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர்கள் குழுவொன்று 

வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விமானம் பயணித்துக் கொண்டிருக்கும் போது திடீரென விபத்துக்குள்ளாகியதற்கான காரணத்தைக் கண்டறியவே 

இக்குழு இங்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. விமானத்தின் பெறுமதி 3 மில்லியன் டொலர் என தெரிவிக்கப்படுகின்றது. சீன ஹேபிங் நிறுவனம் தயாரிப்பான 

இந்த விமானத்தில் 15 பேர் பயணிக்க முடியும். அன்று இடம்பெற்ற விபத்தில் இரு விமானிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு