கசிப்பு குடித்த இடத்தில் தர்க்கம்..! அதனாலேயே வெட்டி கொலை செய்தோம். கிளிநொச்சி கொலை 5 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
கசிப்பு குடித்த இடத்தில் தர்க்கம்..! அதனாலேயே வெட்டி கொலை செய்தோம். கிளிநொச்சி கொலை 5 பேர் கைது..

கிளிநொச்சி- மலையாளபுரம் கிராமத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ்ப் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் குடும்பத்தலைவர் ஒருவரின் சடலம் 

கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு 11.30 மீட்கப்பட்டது.கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான முனியாண்டி விக்னேஸ்வரன் (வயது-38) என்பவரே 

இவ்வாறு வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். அவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் 

கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி 

மற்றும் தப்பித்துச் செல்ல பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு மறைந்து உள்ளதாகத் தெரிவிக்கப்படும் 

மேலும் ஒரு சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்  என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கசிப்பு குடித்திருந்தோம். கொல்லப்பட்டவருக்கும் எங்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. 

வாய்த்தர்க்கத்தில் ஏற்பட்ட முரண்பாடு கத்திக் குத்தில் முடிவடைந்தது என்று கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜெசிந்தன் 

தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு