தறிகெட்டு காா் ஓடிய பெண்..! வீதியில் நின்றவா்கள் மீது மோதியதில் ஒருவா் பலி, இருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
தறிகெட்டு காா் ஓடிய பெண்..! வீதியில் நின்றவா்கள் மீது மோதியதில் ஒருவா் பலி, இருவா் படுகாயம்..

மட்டக்களப்பு காத்தான்குடியில் வேக கட்டுப்பாட்டை இழந்த காா் பாதசாாிகள் மீது மோதி மின்கம்பத்துடனும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிாிழந்துள்ளாா். 

பெண் ஒருவர் செலுத்திய கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதாலேயே இன்று  இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் வயது 72 உடையவர் எனவும் தனது ஊரான அரசடித் தீவுக்கு செல்வதற்கு வீதியோரத்தில் நின்றவேளையில் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு