நாடாளுமன்றில் விருந்துபசாரம்..! சம்ந்தன், சஜித்துடன் சிாித்து சுவாரஸ்யமாக பேசிய ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றில் விருந்துபசாரம்..! சம்ந்தன், சஜித்துடன் சிாித்து சுவாரஸ்யமாக பேசிய ஜனாதிபதி..

நாடாளுமன்றில் சபாநாயகாின் விருந்து உபசாரத்தில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் மற்றும் எதிா்கட்சி தலைவா் சஜித் பிறேமதாஸ ஆகியோருடன் சுவாரஸ்யமாக கலந்துரையாடியுள்ளாா். 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் அருகில் இருந்தார். அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு வாழ்த்து தெரிவிக்கும்வகையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கைகொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து 

மிகவும் அன்னியோன்னியமாக அளவலாடிக்கொண்டிருந்தார். பின்னர் இவர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பலரும் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

அத்துடன் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த வெளிநாட்டு தூதுவர்கள் ராஜதந்திர அதிகாரிகள் என பலரும் இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு