எதற்கும் தயாராக இருங்கள்..! இராணுவ தளபதி இராணுவத்தினருக்கு அறிவுரை..

ஆசிரியர் - Editor I
எதற்கும் தயாராக இருங்கள்..! இராணுவ தளபதி இராணுவத்தினருக்கு அறிவுரை..

இலங்கையில் எந்த அச்சுறுத்தல் உருவானாலும் அதனை எதிா்கொள்ள தயாராக இருங்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளாா். 

ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள புதிய இராணுவ தலைமையகத்தில் புத்தாண்டை முன்னிட்டு இன்று  இராணுவத்தினருக்கு ஆற்றிய உரையின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

முறையான பயிற்சி மூலமே உள்ளக அல்லது வெளிப்புற அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள முடியும் என்றும் அதன் மூலம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் 

தேசிய பாதுகாப்புத் தேவைகளை அமுல்படுத்துவதில் இராணுவம் அதிக முன்னுரிமையை வழங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் நாட்டில் அண்மையில் நிலவிய 

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தின் உதவியதை சுட்டிக்காட்டிய அவர் இந்த பணிகளில் 

ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.அத்தோடு 2009 மே மதத்திற்கு முன்னர் இராணுவத்தினர் செய்த தியாகங்களையும் நினைவு கூர்ந்த அவர், 

அவர்களது குடும்பங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.இன்றுவரை இராணுவம் சம்பாதித்துள்ள நல்ல பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், 

தொழில்முறை மற்றும் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்துடன் எதிர்கால நடவடிக்கைகளை தொடர்வதற்கும் இராணுவத் தளபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு