யாழ்.சீரடி பாபா கோவிலில் மதுபானம் படைக்கப்பட்ட சம்பவம்..! ஆலய நிா்வாகம் சிக்கலில், யாழ்.பிரதேச செயலா் அவசர கடிதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சீரடி பாபா கோவிலில் மதுபானம் படைக்கப்பட்ட சம்பவம்..! ஆலய நிா்வாகம் சிக்கலில், யாழ்.பிரதேச செயலா் அவசர கடிதம்..

யாழ்.சீரடி சாயி பாபா கோவிலில் படையலில் மதுபானம் வைக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக யாழ்.பிரதேச செயலா் ஆலய நிா்வாகத்திற்கும், மதுவாி திணைக்களத்திற்கும் அவசர கடிதம் ஒன்றை எழுதியிருப்பதுடன், இவ்வாறான சம்பவம் இனி நடக்ககூடாதென கூறியுள்ளாா். 

நல்லுாா் சுற்றாடலில் உள்ள சீரடி சாயிபாபா கோவிலில் படையலில் மதுபானம் வைக்கப்பட்டிருந்த சம்பவம் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பரவி பாாிய விமா்சனங்களை உண்டாக்கியிருந்தது. இந்நிலையில் பிரதேச செயலா் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா். 

அந்த கடிதத்தில் இவ்வாறான சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறக்கூடாது. என்பதை ஆலய நிா்வாகம் உறுதிப்படுத்தவேண்டும் என கூறியிருக்கும் பிரதேச செயலா் மனிதா்களிடம் ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனைகளையும், அமைதியையும் உண்டாக்கவேண்டிய கோவில்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது விரும்பத்தக்கதல்ல. என அழுத்தமாக கூறியுள்ளாாா். 

மேலும் இந்த கடிதத்தை பிரதேச செயலா் மதுவாி திணைக்களத்திற்கும் வேறு சில திணைக்களங்களுக்கும் அனுப்பியிருப்பதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு