இராணுவ சிப்பாய் மீது சரமாாியாக வாள்வெட்டு நடத்தி துப்பாக்கியை பறித்து சென்ற கும்பல்..! சிப்பாய் படுகாயம், வவுனியாவில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
இராணுவ சிப்பாய் மீது சரமாாியாக வாள்வெட்டு நடத்தி துப்பாக்கியை பறித்து சென்ற கும்பல்..! சிப்பாய் படுகாயம், வவுனியாவில் சம்பவம்..

இராணுவ முகாமில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் வீடு திரும்பும்போது இரா ணுவ சிப்பாய் மீது சரமாாி வாள்வெட்டு நடாத்திய கும்பல் துப்பாக்கியை பறித்துக் கொண்டு த ப்பி ஓடியிருக்கின்றது. 

இந்த சம்பவம் வவுனியா- போகஸ்வெவ பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள 7 ஆவது சிங்க றெயிமென்ட் இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் இன்று காலை தனது பணி முடிந்ததுதும் 

இராணுவ முகாமை நோக்கி சென்றுள்ளார். இதன்போது இனம் தெரியாத நபர்கள் அவரை வாளால் வெட்டி தாக்கியுள்ளதுடன், அவரது துப்பாக்கியினையும் பறித்து சென்றுள்ளனர்.

சம்பவத்தில் எம்.ரத்நாயக்க வயது 24 என்ற இராணுவ வீரரே படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக பொலிசார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு