சுவிஸ் தூதரக பணியாளரை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு..! தெற்கில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
சுவிஸ் தூதரக பணியாளரை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு..! தெற்கில் பரபரப்பு..

கடத்தப்பட்டு தாக்கப்பட்டதுடன், அச்சுறுத்தப்பட்டதாக பொய் தகவல்களை வழங்கிய சுவி ஸ் தூதரக பெண் பணியாளரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் புலனா ய்வு துறைக்கு அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. 

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ், குற்ற விசாரணைத் திணைக்களத்தில் இன்று காலை மீண்டும் முன்னிலையாகியுள்ளார். 

ஏற்கனவே அவரிடம் ஐந்து தடவைகள் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள போது, சாட்சியம் பெறும் நடவடிக்கைகள் இன்னமும் முடியவில்லை என்று குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் மீண்டும் குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார் .சாட்சியம் பெறப்பட்ட பின்னர் 

அவர் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டார்.தொடர்ந்து அங்கொடை மனநல மருத்துவமனையில் நிபுணத்துவ ஆய்வுக்குட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக 

கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் பொய்யான தகவல்களை வழங்கியதற்காக அவரை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்ட மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு