மணல் அகழ்ந்து கொண்டிருந்த 5 மணல் கொள்ளையர்கள் கைது..! அரியாலை பூம்புகாரில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மணல் அகழ்ந்து கொண்டிருந்த 5 மணல் கொள்ளையர்கள் கைது..! அரியாலை பூம்புகாரில் சம்பவம்..

யாழ்.அரியாலை- பூம்புகார் பகுதியில் மணல் அகழ் வில் ஈடுபட்டிருந்த 5 மணல் கொள்ளையர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள கடற்கரை ஓரமாக பெக்கோ வாகனத்தின் மூலம் மணல் அகழ்வில் ஈடுபட்ட போது 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவர்களை கைது செய்து விசாரணை செய்தபோது சுரங்க அகழ்வு பணியகத்தின் அனுமதியின்றி அந்தப் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட கண்டறியப்பட்டது .

அத்துடன் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு டிப்பர் வாகனம் 3 உழவு இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு