கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 ஆயிரம் இந்திய மீனவர்களுக்கு நடந்தது என்ன..? இலங்கை கடற்படை நிராகரிப்பு..

ஆசிரியர் - Editor I
கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 ஆயிரம் இந்திய மீனவர்களுக்கு நடந்தது என்ன..? இலங்கை கடற்படை நிராகரிப்பு..

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் எச்சரிக் கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக வெளியான செய்தியை கடற்படை மறுத்துள்ளது. 

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையினுள் சட்டவிரோதமாக மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். 

என கடற்படை பேச்சாளர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.ராமேஷ்வரம் பகுதியில் இருந்து படகுகள் மூலம் பிரவேசித்த சுமார் 3000 மீனவர்கள், 

கடந்த சனிக்கிழமை இலங்கை கடற்படையினரால் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய செய்திகளில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு