புதிய சிக்கலில் மாட்டினார் ராஜித..! குற்ற புலனாய்வுதுறை விசாரணை வளையத்திற்குள்..

ஆசிரியர் - Editor I
புதிய சிக்கலில் மாட்டினார் ராஜித..! குற்ற புலனாய்வுதுறை விசாரணை வளையத்திற்குள்..

வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தவுள்ளது. 

பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரியிடம் நடத்தப்படும் விசாரணைகளின் பின்னர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம், 

விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பெரும்பாலும், இந்த வார இறுதியில் ராஜித சேனாரத்ன விசாரணைக்காக அழைக்கப்படுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.இந்தக் கடத்தல் குற்றச்சாட்டு புனையப்பட்ட ஒரு கதை 

என்ற முடிவுக்கு வந்துள்ள குற்ற விசாரணைப் பிரிவினர், இந்த விவகாரத்துக்கும் ராஜித சேனாரத்னவுக்கும் தொடர்பு உள்ளதா எனக் கண்டறியவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளரின் வாய்க்குள், 

கைத்துப்பாக்கி வைத்து அச்சுறுத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு