நிஷாந்த சில்வா தப்பி ஓடியதை மறைக்க நடந்த நாடகமே சுவிஸ் துாதரக பணியாளா் கடத்தல்..! அதன் பின்னணி அமொிக்கா..

ஆசிரியர் - Editor I
நிஷாந்த சில்வா தப்பி ஓடியதை மறைக்க நடந்த நாடகமே சுவிஸ் துாதரக பணியாளா் கடத்தல்..! அதன் பின்னணி அமொிக்கா..

குற்றப்புலனாய்வு பிாிவின் பொலிஸ் பாிசோதகா் நிஷாந்த சில்வா தப்பி ஓடிய விவகாரத்தை திசை திருப்ப நடத்தப் பட்ட நாடகமாக சுவிஸ் துாதரக பணியாளா் கடத்தல் விவகாரம் இருக்கலாம். 

மேலும் இந்த நாடகத்தின் பின்னணியில் அமொிக்கா இருப்பதாகவும் ஐ.நாவுக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதி தமார குணநாயகம் கூறியிருக்கின்றனாா். 

கொழும்ப ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இது குறித்து மேலும் அவா் கூறுகையில், 

இராணுவ தேவைக்காக இலங்கையை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி செய்கிறது.எமது நாட்டில் இருந்து சீனா, பாகிஸ்தான், ஈரான், ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்த முடியும்.

அதற்காகவே அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் கூறியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு