தமிழீழ விடுதலை புலிகள் ஒருபக்கம், முஸ்லிம் தீவிரவாதிகள் மறுபக்கம்..! இது பௌத்த நாடு..! அதை பாதுகாக்கவேண்டும்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் ஒருபக்கம், முஸ்லிம் தீவிரவாதிகள் மறுபக்கம்..! இது பௌத்த நாடு..! அதை பாதுகாக்கவேண்டும்..

தமிழீழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெறுவதற்காக முயற்சிக்கின்றனர். மறுபக்கம் இந்த நாட்டில் அமைதியை குழப்ப சில தீவிரவாத இளைஞர் குழுக்கள் முயற்சிக்கின்றன. இது பௌத்த நாடு அதை பாதுகாக்கவேண்டும். 

அதற்காக புலனாய்வு அமைப்புக்கள் ஆற்றவேண்டிய பங்களிப்பு மிக முக்கியமானது. என பாதுகாப்பு தொடர்பாக பலாலியில் நடைபெற்ற மாநாட்டில் பாதுகாப்பு செயலர் கமால் குணரட்ண கூறியிருக்கின்றார். 

யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது படையினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார். முஸ்லீம்தீவிரவாத சக்திகள் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் நாட்டின் பொருளாதாரத்தை

அழித்துள்ளதுடன் சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முழுமையான விசாரணைகள் அவசியம் என குறிப்பிட்டுள்ள கமால்குணரட்ண இந்த 

பயங்கரவாத தாக்குதல்களிற்கு யார் காரணம் என்பதை கண்டறியவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது பௌத்த நாடு, மக்களிற்கு தமதுசொந்த மதங்களை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளது ,அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழக்கூடிய 

சூழலை ஏற்படுத்துவதுபடையினரின்கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு