வீதியின் ஓரத்தில் நின்றவர்களுக்கு நடந்த கதி..! 3 பேர் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
வீதியின் ஓரத்தில் நின்றவர்களுக்கு நடந்த கதி..! 3 பேர் வைத்தியசாலையில்..

வீதி ஓரத்தில் நின்றவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வவுனியா, தாண்டிக்குளம் பகுதியிலிருந்து காளி கோவில் வீதியில் குருமன்காடு நோக்கிச் சென்ற கார் திருநாவற்குளம் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

ஆலயத்துக்கு அருகிலிருந்த மரக்கறி கடை முன்பாக மூன்று மோட்டர் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டது. இதன்போது அவ்விடத்தில் நின்ற மூவரும் படுகாயமடைந்தனர். 

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளதுடன், சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு