ஹயஸ் வாகனம் மோதி கீழே விழுந்தவர் மீது ஏறிய பட்டா..! யாழ்.சிறுப்பிட்டியில் சம்பவம். குடும்பஸ்த்தர் பலி..!

ஆசிரியர் - Editor I
ஹயஸ் வாகனம் மோதி கீழே விழுந்தவர் மீது ஏறிய பட்டா..! யாழ்.சிறுப்பிட்டியில் சம்பவம். குடும்பஸ்த்தர் பலி..!

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

குறித்த விபத்து சம்பவத்தில் முத்துக்குமாரசாமி - திலீபன், வயது 40 என்னும் பங்குச் சந்தையின் யாழ்ப்பாணம் கிளை முகாமையாளரே மரணமடைந்தவராவார்.

யாழ்.நகரிலிருந்து நீர்வேலி நோக்கிப் பயணித்த சமயம் எதிரே வந்த கயசில் மோதுண்ட நிலையில் வீதியில் வீழ்ந்தவரை மற்றுமோர் வாகனம் ஏறிச் சென்றுள்ளது. 

இதனால் படுகாயமடைந்தவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு