வடமாகாணத்தில் அதிகாரிகள் மீது பாயும் அரசியல் பழிவாங்கல்..! அமைச்சர் ஒருவரே பின்னணியாம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் அதிகாரிகள் மீது பாயும் அரசியல் பழிவாங்கல்..! அமைச்சர் ஒருவரே பின்னணியாம்..

ஜனாதிபதி கோட்டபாய அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளதை தொடர்ந்து வடக்கிலிருந்து அதி காரிகள் தொடர்ச்சியாக இடமாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் அமைச்சின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து 

யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்.மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதேபோல் யாழ்.மாவட்ட செயலரையும் இடமாற்றம் செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

இந்த அரசியல் பழிவாங்கலின் பின்னால் வடக்கில் உள்ள அமைச்சர் ஒருவரே உள்ளதாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு